Home தாயகச் செய்திகள் புதிய மோட்டார் சைக்கிள் யாழில் இரண்டு உயிர்களைப் பறித்தது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய மோட்டார் சைக்கிள் யாழில் இரண்டு உயிர்களைப் பறித்தது!

Share
Share

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இளைஞர்கள் இருவர் மின்கம்பத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

வீதியில் மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் – சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த 17, 18 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் ஓர் இளைஞர் இரு நாள்களுக்கு முன்னரே புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியிருந்தார். இந்தநிலையில், இருவரும் நேற்று புன்னாலைக்கட்டுவனுக்குச் சென்று விட்டு மீண்டும் சுன்னாகம் நோக்கித் திரும்பியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இருவரும் அதிவேகமாகப் பயணித்த நிலையில் வீதியில் மாடு குறுக்கிட்டுள்ளது. வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாட்டை விலத்தி அவர்கள் பயணிக்க முயன்ற நிலையில் வீதிக் கரையில் இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் பங்கு; றீகனுக்கு கடிதம் அனுப்பினார்!?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய...

பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். தேசிய...

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும்! – ராஜிதவின் மகன் தெரிவிப்பு! 

“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!

“எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள்....