Home தாயகச் செய்திகள் புதிய மோட்டார் சைக்கிள் யாழில் இரண்டு உயிர்களைப் பறித்தது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய மோட்டார் சைக்கிள் யாழில் இரண்டு உயிர்களைப் பறித்தது!

Share
Share

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இளைஞர்கள் இருவர் மின்கம்பத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

வீதியில் மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் – சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த 17, 18 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் ஓர் இளைஞர் இரு நாள்களுக்கு முன்னரே புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியிருந்தார். இந்தநிலையில், இருவரும் நேற்று புன்னாலைக்கட்டுவனுக்குச் சென்று விட்டு மீண்டும் சுன்னாகம் நோக்கித் திரும்பியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இருவரும் அதிவேகமாகப் பயணித்த நிலையில் வீதியில் மாடு குறுக்கிட்டுள்ளது. வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாட்டை விலத்தி அவர்கள் பயணிக்க முயன்ற நிலையில் வீதிக் கரையில் இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...