Home தென்னிலங்கைச் செய்திகள் தன்பாலின உறவு விவகாரம்; பேரவை ஆணையாளரின் கருத்தை இலங்கையின் நீதியமைச்சர் நிராகரிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தன்பாலின உறவு விவகாரம்; பேரவை ஆணையாளரின் கருத்தை இலங்கையின் நீதியமைச்சர் நிராகரிப்பு!

Share
Share

தன் பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை  நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும் அதனைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் இலங்கைக்கான பயணத்தின் இறுதிநாளில் நடத்திய ஊடக சந்திப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியிருந்தார். தாம் அதனை வரவேற்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில்...

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம் – சிங்கப்பூர் தம்பதியினர் செய்து வைத்தனர்!

யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம்...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...