Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் 2 மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் 2 மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

Share
default
Share

கடந்த ஏப்ரல், மே மாதங்களில்நாட்டுக்குள் கடத்தப்பட்ட  2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பெறுமதியான ஆயிரத்து 758 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட 4 சோதனை நடவடிக்கைகளில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் அந்த பணியகம் கைது செய்துள்ளது.

2025ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஆயிரத்து 84 கோடி ரூபாய் என்றும் ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு ஆயிரத்து 216 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கூமாங்குளம் குழப்பம்; தமது தரப்பில் ஐவர் காயம் என்கிறது பொலிஸ்!

வவுனியா, கூமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையில் பொலிஸார்...

மன்னாரில் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டன என நம்பப்படும் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப்...

இலங்கைக்கான புதிய அமெ. தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை...

செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்? – வீரவன்ச கேள்வி!

“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று...