Home தென்னிலங்கைச் செய்திகள் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணை!
தென்னிலங்கைச் செய்திகள்

உயர் அதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணை!

Share
Share

பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சு செயலாளர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவை நடத்துகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து அரச அதிகாரிகள் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் இந்த அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்து வரவோ அல்லது கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழல் மற்றும் முறைகேடுகளை செய்வதற்கு அரசியல்வாதிகளுக்கு உதவினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இந்த பொது அதிகாரிகள் அந்த முறைகேடுகளால் பயனடைந்தனர் என்று விசாரணைக் குழுக்கள் கூறுகின்றன.

பல அதிகாரிகள் பல இலட்சம்  ரூபாய் மதிப்புள்ள நிலம், வாகனங்கள், பிற சொத்துகளை வாங்கியமை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. புலனாய்வுக் குழுக்கள் தற்போது இந்த அதிகாரிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றன.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் சொத்துகள் குறித்தும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...