Home தாயகச் செய்திகள் 583 கிலோ பீடி இலைகளுடன் கைப்பற்றப்பட்ட டிங்கிப் படகு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

583 கிலோ பீடி இலைகளுடன் கைப்பற்றப்பட்ட டிங்கிப் படகு!

Share
Share

இலங்கைக் கடற்படையினர் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 583 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு டிங்கிப் படகு கைப்பற்றப்பட்டது.

இலங்கைக் கடற்படையினரால் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கைகளினால் பீடி இலைகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கிப் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் சான்றுப் பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பிற சான்றுப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காணும்...

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம்,...

சமஷ்டியை வலியுறுத்தி வெருகலில் கவனவீர்ப்பு!

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை...

பஸ் விபத்தில்42 பேர் காயம்!

கேகாலை -அவிசாவளை வீதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தெஹியோவிட்ட பகுதியில்...