இலங்கைக் கடற்படையினர் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 583 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு டிங்கிப் படகு கைப்பற்றப்பட்டது.
இலங்கைக் கடற்படையினரால் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கைகளினால் பீடி இலைகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கிப் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a comment