Home தென்னிலங்கைச் செய்திகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறைப்பாடு; விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறைப்பாடு; விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!

Share
Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட 16 பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

1985ஆம் ஆண்டு “வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுப்பது, முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்தப் பிரிவு நிறுவப்பட்டதாக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பிரிவு விரைவாக நிறுவப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...