பொலனறுவை, வெலிகந்தை, நாமல்கம பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்கள் வெலிகந்தை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
வெலிகந்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கராஜின் உரிமையாளர் 5 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கராஜை மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்து பிரதேசத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment