Home தென்னிலங்கைச் செய்திகள் வீட்டு உணவுதான் வேண்டும் – சிறையில் அடம்பிடிக்கும் ராஜித!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வீட்டு உணவுதான் வேண்டும் – சிறையில் அடம்பிடிக்கும் ராஜித!

Share
Share

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ராஜித சேனாரத்னவைப் பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது என்றும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவைத் தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு கோரி  ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ராஜித சேனாரத்னவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்றுக் காலை ஆஜரானதைத் தொடர்ந்து அவரைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...

இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த...