முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறவுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேற முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை 4 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ செல்லவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
தங்காலையில், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் விழா ஒன்றையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment