வவுனியா – இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
அந்த மோட்டர் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பஸ் தரிப்பு நிலையத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குளளானது.
விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலயில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.
இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment