Home தாயகச் செய்திகள் வவுனியாவில் மனைவி, மாமியாரைக் கத்தியால் குத்தியகுடும்பஸ்தர் வீட்டின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியாவில் மனைவி, மாமியாரைக் கத்தியால் குத்தியகுடும்பஸ்தர் வீட்டின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

Share
Share

வவுனியா, சமயபுரம் பகுதியில் தனது மனைவியையும், மனைவியின் தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு இரவு வருகை தந்த உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்தக் குற்றச் செயலைப் புரிந்துள்ள சந்தேகநபரான குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரும், படுகாயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளைச் சேந்தவர்கள் எனக் கிராம மக்கள் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இருவரும் கணவன், மனைவியாகக் கடந்த ஒரு வருட காலமாக சமயபுரம் பகுதியில் வசித்து வந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் வசந்தி (வயது30), அவரது தாயாரான இந்திரா (வயது 69) என்ற இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகுமார் (வயது 45) என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திகள்...

இனப்படுகொலைகளை விசாரித்தால் மட்டுமே யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளலாம் – கஜேந்திரகுமார்!

தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான...

சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை...

போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்)...