Home ஒளிப்படங்கள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள்)
ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள்)

Share
Share

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பிரதம குரு கணபதீஸ்வரக் குரு தலைமையிலான குருமார் திருவிழா பூஜைகளை நடத்துகின்றனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 4ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 5ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 6ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், 7ஆம் திகதி பட்டுத் தீர்த்தத் திருவிழாவும், 8ஆம் திகதி ஆஞ்சநேயர் மடையும் இடம்பெறவுள்ளது.

திருவிழாவுக்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளன.

நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான குழுவும், ஏனைய பணிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளன.

மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மேற்கொண்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

போதைப்பொருள் கடத்தல்; மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல்...