Home தாயகச் செய்திகள் வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

Share
Share

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வன்முறையைக்  கட்டுப்படுத்தினர். அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட தர்க்கம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சினை மீண்டும் தலைதூக்கிய நிலையில், அது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அந்தப் பகுதியில் குழுமியிருந்தவர்களைத் துரத்தினர்.

அத்துடன் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர். பலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதலே துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணம் – அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான  துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள்...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி  மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட  அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன....

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் – சிறீதரன் வலியுறுத்து!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள...

கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்...