Home தாயகச் செய்திகள் வடமராட்சியில் சட்டவிரோத ஜோதிட நிலையம்! இந்தியர்கள் மூவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடமராட்சியில் சட்டவிரோத ஜோதிட நிலையம்! இந்தியர்கள் மூவர் கைது!

Share
Share

சட்டவிரோதமாக ஜோதிட நிலையத்தை இயக்கிய இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையத்தை இந்தியர்கள் மூவரே நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவலர் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், நேற்று ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இந்திய பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்
போது குறித்த மூவரும் சுற்றுலா வீஸாவில் நாட்டுக்குள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்திய பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அதிக தொகை பணம்; சுன்னாகம் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு...

இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) கொழும்புக்கு...

செம்மணி அகழ்வுப் பணிகளில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள...

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...