Home தாயகச் செய்திகள் வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Share
Share

முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

இது சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதைக் கண்டிப்பதல்ல என்றும், மாறாக சட்டத்துக்கு முரணாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு எதிராகச் செயற்படுவதைக் கண்டிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் சில மணி நேரம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...