Home தாயகச் செய்திகள் வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Share
Share

முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

இது சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதைக் கண்டிப்பதல்ல என்றும், மாறாக சட்டத்துக்கு முரணாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு எதிராகச் செயற்படுவதைக் கண்டிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் சில மணி நேரம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

போதைப்பொருள் கடத்தல்; மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல்...