Home தென்னிலங்கைச் செய்திகள் ரவிராஜ் கொலையுடன் மன்னம்பேரிக்கு தொடர்பில்லை என்கிறது பொதுஜன பெரமுன!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரவிராஜ் கொலையுடன் மன்னம்பேரிக்கு தொடர்பில்லை என்கிறது பொதுஜன பெரமுன!

Share
Share

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர், அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் உரையாடல் வடிவம் வருமாறு,

கேள்வி : சிறீ லங்கா பொதுஜன பெர முனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் ஊடக பணிமனையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விடயம் பற்றி என்ன குறிப்பிடுகின்றீர்கள் ?

பதில் : சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர். அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.

கேள்வி : அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதன் பின்னரா தேடிப்பார்த்தீர்கள்?

பதில் : இல்லை, ஊடகங்களில் இவ்விடயம் வெளியான பின்னரே ஆராய்ந்து பார்த்தேன்.

கட்சியின் வேட்புமனு வழங்கும்போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள். அதில் இவர் இந்த விடயம் பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச்...