போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர், அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன் உரையாடல் வடிவம் வருமாறு,
கேள்வி : சிறீ லங்கா பொதுஜன பெர முனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் ஊடக பணிமனையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விடயம் பற்றி என்ன குறிப்பிடுகின்றீர்கள் ?
பதில் : சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர். அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.
கேள்வி : அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதன் பின்னரா தேடிப்பார்த்தீர்கள்?
பதில் : இல்லை, ஊடகங்களில் இவ்விடயம் வெளியான பின்னரே ஆராய்ந்து பார்த்தேன்.
கட்சியின் வேட்புமனு வழங்கும்போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள். அதில் இவர் இந்த விடயம் பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை – என்றார்.
Leave a comment