Home தென்னிலங்கைச் செய்திகள் ரவிராஜ் கொலையுடன் மன்னம்பேரிக்கு தொடர்பில்லை என்கிறது பொதுஜன பெரமுன!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரவிராஜ் கொலையுடன் மன்னம்பேரிக்கு தொடர்பில்லை என்கிறது பொதுஜன பெரமுன!

Share
Share

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர், அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் உரையாடல் வடிவம் வருமாறு,

கேள்வி : சிறீ லங்கா பொதுஜன பெர முனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் ஊடக பணிமனையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விடயம் பற்றி என்ன குறிப்பிடுகின்றீர்கள் ?

பதில் : சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர். அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.

கேள்வி : அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதன் பின்னரா தேடிப்பார்த்தீர்கள்?

பதில் : இல்லை, ஊடகங்களில் இவ்விடயம் வெளியான பின்னரே ஆராய்ந்து பார்த்தேன்.

கட்சியின் வேட்புமனு வழங்கும்போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள். அதில் இவர் இந்த விடயம் பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...