Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் தலைமையில் எதிர்கட்சிகளின் பிரமுகர்கள் சந்திப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணில் தலைமையில் எதிர்கட்சிகளின் பிரமுகர்கள் சந்திப்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நேற்று (10) நடைபெற்றது.

கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பொதுஜன ஐக்கிய முன்னணித் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி, அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...