Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்கிறார் சொல்ஹெய்ம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்கிறார் சொல்ஹெய்ம்!

Share
Share

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – என்று
நோர்வேயின் முன்னாள் விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,

‘இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைகிறேன். தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விளக்கமறியலின்போது அவரின் உடல்நிலை
குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம்.

2022ஆம் ஆண்டில் நாடு பொருளாதார – அரசியல் குழப்பம் அடைந்த போது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.

அவை உண்மையாக இருந்தாலும் ஐரோப்பாவில் அவற்றை குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது.

‘ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரசாரத்திற்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன். ஆனால், தயவு செய்து உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்’, என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...