Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்கிறார் சொல்ஹெய்ம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்கிறார் சொல்ஹெய்ம்!

Share
Share

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – என்று
நோர்வேயின் முன்னாள் விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,

‘இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைகிறேன். தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விளக்கமறியலின்போது அவரின் உடல்நிலை
குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம்.

2022ஆம் ஆண்டில் நாடு பொருளாதார – அரசியல் குழப்பம் அடைந்த போது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.

அவை உண்மையாக இருந்தாலும் ஐரோப்பாவில் அவற்றை குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது.

‘ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரசாரத்திற்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன். ஆனால், தயவு செய்து உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்’, என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர்...

வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள்...