Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காகக் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது.

அவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமையால் அறுவைச் சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்குச் செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்திருப்புப் பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும்.

எனவே, அவர் தனது சொந்தச் செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும்.

தற்போது, ​​அவருக்குக் கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது.

அந்த நிலை படிப்படியாகச் சரி செய்யப்பட்டு வருகின்றது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குற்றவாளிகளை கடல்மார்க்கமாக நாடுகடத்தும் முக்கிய நபர் கிளிநொச்சியில் சிக்கினார்!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழில் ஒரு வாரத்தில் 20 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம்...

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன்...