Home தாயகச் செய்திகள் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

Share
Share

யாழ்ப்பாணம் நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 

இதனையொட்டி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர். 

இதன்பிரகாரம், நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர், உடனடியாக பணிப்புரை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!

சுமார் 10 கிலோகிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.  இதற்கு அமைய...

ஒரு சைக்கிள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி! பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப் பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு சைக்கிளும், 4...

கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் மரணம்!

அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று...