யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
இந்த ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கை முன்வைத்து ஹர்த்தாலுக்குத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று வடக்கு, கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ். நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. அவர்கள் ஆதரவு வழங்காதமை எமக்கு மன வருத்தம்.
எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனேயே ஜனாதிபதி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் எம்மைத் தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர்கள் கூறினார்கள். இதுவே எமது வெற்றி.
இந்தக் ஹர்த்தால் ஓர் அடையாளப் போராட்டமே. இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றக் கோரிப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.” – என்றார்.
Leave a comment