Home தாயகச் செய்திகள் யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் காயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் காயம்!

Share
Share

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது, சிறிய ரக வாகனம் ஒன்றில் பயணித்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த 35 வயதுடைய, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இரு தரப்புக்கு இடையிலான முன்பகையே இந்த வாள்வெட்டு சம்பவத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...