Home தாயகச் செய்திகள் யாழில் டெங்கு கட்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் டெங்கு கட்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!

Share
Share

யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ.கேதீஸ் வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்-

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை.

யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் 15ஆம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் 16ஆம், 17ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு
விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன- என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விவாதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள்...

போக்குவரத்து சட்டம் கடுமையாக்கப்படுகிறது!

போக்குவரத்து சட்டம் நேற்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை...

சகோதரனின் வீட்டுக் கூரையிலிருந்து வீழ்ந்த நபர் மரணம்!

சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மானிப்பாயைச் சேர்ந்த...