Home தாயகச் செய்திகள் யாழில் காணி ஒன்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் காணி ஒன்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூட குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவாலி வடக்கில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (02) துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதன்போது காணிக்குள் இருந்த மலசல கூடத்தின் குழியின் மேல் மூடி உடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, குழிக்குள் பார்த்தவேளை அதனுள் பெருமளவான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி ரவைகளை பார்வையிட்டுச் சென்றனர்.

துப்பாக்கி ரவைகளை மீட்க மல்லாகம் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யவுள்ளதாகவும் நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வாகன இறக்குமதி வருமானத்தை அடுத்த வருடம் 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க...

உடைகிறது சங்கு – சைக்கிள் கூட்டணி?

‘ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி (சங்கு சின்ன கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளை பெற்று விட்டு,...

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...