Home தாயகச் செய்திகள் யாழில் இரு நாட்களில் 09 பேர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் இரு நாட்களில் 09 பேர் கைது!

Share
Share

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கைதுகள் கடந்த இரு நாட்களில் பல பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைளின்போது இடம்பெற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேரும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவருமாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அரசடி பகுதியில் ஹெரோயினுடன் நேற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து 2.25 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அத்துடன், சந்தேகநபர் கொழும்பை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...