Home தாயகச் செய்திகள் யானை தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய வேதம், பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய எட்டு பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று முன்தினம் காலை தனது வீட்டிலிருந்து பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்றார்.

இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது, நேற்றுக் காலை யானை தாக்கி உயிரிழந்த நிலையில்
சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...

பல்லாயிரக்கணக்கில் திரண்டு மக்கள் உன்னதர்களை நினைவேந்தினர்!

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்...