Home தாயகச் செய்திகள் யானை தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய வேதம், பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய எட்டு பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று முன்தினம் காலை தனது வீட்டிலிருந்து பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்றார்.

இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது, நேற்றுக் காலை யானை தாக்கி உயிரிழந்த நிலையில்
சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...