Home தாயகச் செய்திகள் மோட்டார் சைக்கிளை மோதிய உழவூர்தி! யாழில் பெண் மரணம்! இளைஞர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளை மோதிய உழவூர்தி! யாழில் பெண் மரணம்! இளைஞர் படுகாயம்!

Share
Share

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு இயந்திரம் மோதியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவில் கச்சாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், கெற்பேலி மேற்கு – மிருசுவிலை சேர்ந்த நந்த குமார் ஜெயலக்ஷ்மி (வயது 46) என்பவரே உயிரிழந்தார். கனகலிங்கம் செந்தூரன் (வயது 22) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

குடும்பப் பெண்ணும் அவரின் உறவினருமான இளைஞரும் மோட்டார் சைக்கிளில் கச்சாய் வீதியூடாக கொடிகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அதே திசையில் பயணித்த மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு
இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியது.

இதில், குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இளைஞர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதேநேரம், விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பிச் சென்றுள்ளது. விபத்துக் குறித்த விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...