முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இன்று பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a comment