Home தாயகச் செய்திகள் முகமாலையில் எறிகணைக் குண்டுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முகமாலையில் எறிகணைக் குண்டுகள் மீட்பு!

Share
Share

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை வெடிக்காத நிலையில் 31 எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டைச் சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டியுள்ளார். அதன்போது கிடங்கினுள் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்தார்.

அறிவித்தலில் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அந்தக் குண்டுகளை மீட்பதற்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...