யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் நேற்றுக் காலை ஆடைகளை அயன் செய்து கொண்டிருந்தார்.
இதன்போது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில்
அவர் உயிரிழந்தார்.
பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
Leave a comment