Home தாயகச் செய்திகள் மாங்குளத்தில் வயோதிபப் பெண் வெட்டிப் படுகொலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாங்குளத்தில் வயோதிபப் பெண் வெட்டிப் படுகொலை!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி
கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

70 வயதான மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்றுமுன்தினம் மாலை மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நேற்று காலை கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாங்குளம் பொலி
ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில்...

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம் – சிங்கப்பூர் தம்பதியினர் செய்து வைத்தனர்!

யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம்...

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

வவுனியாவில் இ.போ.ச பேருந்து சேவை புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து...