Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் நோக்கம் – ஜெனிவாவில் இந்தியா விடுத்த கோரிக்கைக்கு நளிந்த இப்படி பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் நோக்கம் – ஜெனிவாவில் இந்தியா விடுத்த கோரிக்கைக்கு நளிந்த இப்படி பதில்!

Share
Share

“மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதவாது:-

“குறித்தொகுக்கப்பட்ட காலத்தில் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் கால எல்லை பற்றி எனக்கு உறுதியாகக் கூற முடியாது. அதற்குரிய சட்டதிருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“அந்தச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும். அதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டமும் மறுசீரமைக்கப்படும்.” – என்றார் .

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...