Home தென்னிலங்கைச் செய்திகள் மஹிந்தவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரிக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரிக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகிய போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இலஞ்ச,

ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றடைகிறது என்கிறார் ரணில்!

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின்...

இலங்கையின் மதுவரி உத்தியோகத்தர்களில் 20 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை...

வாகன இறக்குமதி வருமானத்தை அடுத்த வருடம் 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க...

போதைக் கும்பலின் செயற்பாடுகள் அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளன – ஜனாதிபதி அநுர!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக்கும்பல்களின் செயற்பாடுகள், அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....