Home தென்னிலங்கைச் செய்திகள் மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?

Share
Share

கொழும்பு, விஜேராம வீதியில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் குழு கலந்து கொண்ட சமீபத்திய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2025 ஜூன் 16 ஆம் திகதியன்று, அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அத்துடன், தேவையான சட்டத்தைத் தயாரிப்பதற்கான பணிகள் சட்ட வரைஞருக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டவுடன், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவும் முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள...

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறுமாம் – இப்படி பிரதி அமைச்சர் உறுதி!

“மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின் கீழ் அந்தத் தேர்தல் நடத்தப்படும்.” இவ்வாறு...

கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்? – அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்!

“தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே,...

பகிடிவதை; கிழக்குப் பல்கலையில் மாணவிகள் 07 பேர் உட்பட 16 பேர் கைது!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள...