Home தாயகச் செய்திகள் மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!

Share
Share

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப் படகுகள் ஏற்றிச் செல்லப்பட்டு அச்சுவேலித் கைத்தொழில் பேட்டையில் கொட்டப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுராகுமார திஸாநாயக்க எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி மயிலிட்டித் துறைமுகத்தைப் பார்வையிட வருகின்றார். அதனையொட்டி அந்தப் பகுதியில் தற்போது தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் பெரும் பகுதி உடனடியாக அங்கிருந்து அகற்றப்படவுள்ளன.

மயிலிட்டியில் தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் 48  படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 13 படகுகள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டன. இதில் 7 படகுகள் இந்திய மீனவர்களால் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேபோன்று, அரசுடமையாக்கப்பட்ட 64 படகுகளும் தரித்து நிற்கின்றன.

அரச உடமையாக்கப்பட்ட 64 படகுகளில்  முன்னாள் அமைச்சரின் பணிப்பில் மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட இரு படகுகள் தவிர்ந்த 62 படகுகளே மயிலிட்டியில் இருந்து அகற்றப்படவுள்ளன.

இவ்வாறு மயிலிட்டித் துறைமுகத்தில் உள்ள  62 படகுகளும் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் இன்று வெளியே இழுத்து எடுக்கப்படவுள்ளன. அவ்வாறு எடுக்கப்படும் படகுகள் பாரம் தூக்கிகள் மூலம் தட்டுப் பாரவூர்திகளில் ஏற்றப்பட்டு அச்சுவேலிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில்,...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மட்டக்களப்பில் விபத்து! மூவர் காயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி...

சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது...