Home தாயகச் செய்திகள் மன்னார் பொலிஸார் கைது செய்த இளைஞர் மரணம்! மரணத்தில் சந்தேகம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னார் பொலிஸார் கைது செய்த இளைஞர் மரணம்! மரணத்தில் சந்தேகம்!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

மன்னார் பேசாலை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் உடலம் மீதான பிரேத பரிசோதனை மன்னார் பொது மருத்துவமனையில் நாளை நடைபெறவுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஜஸ் போதைப் பொருள் தொடர்பில் குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் பேசாளை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...