Home தாயகச் செய்திகள் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

Share
Share

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த மின் சக்தி அமைச்சர் தலைமையில் நேற்று பாராளுமன்ற அறையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது மேலும், திட்டத்தை எதிர்க்கும் தரப்புகளுடன் பேச்சு நடத்தி இந்த விடயத்துக்குத் தீர்வு எட்டுவது என்றும் இரு வாரங்களின் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சு ஒன்றை நடத்துவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

மன்னாரில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் மற்றும் இல்மனைட் மண் அகழ்வுக்கும் பெருமளவில் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,

இவை தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,
சிவில் சமூக பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல தரப்பினர் பங்கேற்றனர்.

இதன்போது, காற்றாலை மின் திட்டத்தால் மன்னார் மாவட்டத்தில் மனித மற்றும் இயற்கை வாழ்விடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அத்துடன், திட்டத்தின்
ஆரம்ப பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மன்னாரை சேர்ந்த சிவில் அமைப்பினர் எடுத்துரைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எட்டுவது என்றும் அதுவரை இந்தத்திட்டத்தை இடைநிறுத்தி வைப்பது
எனவும் மின்சக்தி அமைச்சர் தீர்மானம் எடுத்து அறிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் இரு வாரங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுடன் உரையாடவும் முடிவு எட்டப்பட்டது.

தவிர, காற்றாலை மின் திட்டப் பணிகளுக்காக மன்னார் தீவுக்குள் கொண்டு செல்லப்பட்ட உபகரணங்களை பாதுகாப்பாக பிறிதோர் இடத் தில் வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...