Home தாயகச் செய்திகள் மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!

Share
Share

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை – அதற்கு உதவியமைக்காக சகோதரர்கள் இருவருக்கு 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்தது மன்னார் மேல் நீதிமன்றம்.

குற்றத்தின் பாரதூரதன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே இந்தத்
தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன், குற்றவாளிகள் சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாயை நட்டஈடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை வன்புணர்ந்த சகோதரருக்கும் இதற்காக அவருக்கு உதவிய சகோதரருக்குமே 7 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், சிவஸ்கந்தசிறீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

33 அரச நிறுவனங்களை மூடுகிறது அரசாங்கம்?

நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை....

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று...

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! ஆனால் உள்ளகப் பொறிமுறையின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்கவே முடியாது என்கின்றார் பிரதமர்!

“பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல....

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் பலி!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 9ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற...