Home தாயகச் செய்திகள் மது பாவனையால் தினமும் இலங்கையர்கள் 50 பேர் மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மது பாவனையால் தினமும் இலங்கையர்கள் 50 பேர் மரணம்!

Share
Share

மது பாவனையால் தினமும் சுமார் இலங்கையர்கள் 50 பேர் மரணமடைகின்றனர் – என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் மதுசாரத்துக்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மதுபாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைக்கவும் மது பாவனையால் ஏற்படுகின்ற சுகாதார, பொருளாதார பிரச்னைகளைக் குறைக்கவும் விரைவான அரச திட்டம் அவசியம்.

நாட்டில், நிகழும் மரணங்களில் 83 சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது பாவனையால் தினமும் சுமார் 50 பேர் மரணமடைகின்றனர்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணமடைகிறார்கள்.

இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு மதுசார பாவனையும் முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையின் மதுவரி உத்தியோகத்தர்களில் 20 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை...

உடைகிறது சங்கு – சைக்கிள் கூட்டணி?

‘ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி (சங்கு சின்ன கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளை பெற்று விட்டு,...

போதைக் கும்பலின் செயற்பாடுகள் அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளன – ஜனாதிபதி அநுர!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக்கும்பல்களின் செயற்பாடுகள், அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...