Home பிரதான செய்திகள் மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை!
பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை!

Share
Share

மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த வீதிகளில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடவடிக்கை ஒன்றை சனிக்கிழமை (12) இரவு மேற்கொண்டதையடுத்து மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான 6 மாதத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்களை தடுப்பதற்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் வழிகாட்டலில் முக்கிய சந்திகளில் வீதியால் பயணிக்கும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும்...

சு.ஜெய்சங்கரை கூட்டாகச் சந்தித்தனர் முன்னைய கூட்டமைப்பு பிரதிநிதிகள்!

மாகாண சபைகள் தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய...