Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

Share
Share

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி. ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் நேற்று சனிக்கிழமை இரவு மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்துத் தூங்கியதால் ரயில் மோதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் இன்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொண்டு வரப்பட்டது.

விபத்து தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...

இந்த ஆண்டில் 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! ஆனால் உள்ளகப் பொறிமுறையின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்கவே முடியாது என்கின்றார் பிரதமர்!

“பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல....