Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!

Share
Share

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் கத்திமுனையில் தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வயோதிப பெண்ணொருவரின் 16 பவுண் தாலிக்கொடியே திருடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 16 பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொள்ளையடித்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவரின் ஈருருளியையும் குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.

கொக்குவில் காவல்துறைக்கு உட்பட்ட சின்ன ஊறணியில் வசித்து வரும் குறித்த பெண் ஓய்வுபெற்ற செவிலியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...