மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று தந்திரிமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இளைஞர் உறவினர்களுடன் இணைந்து மடு மாதா தேவாலயத்துக்குச் சென்றுள்ள நிலையில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது நீராடுவதற்காக மல்வத்து ஓயாவுக்குச் சென்றுள்ளார்.
மேற்படி இளைஞரும் உறவினர்களும் இணைந்து மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
இது தொடர்பில் தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment