Home தென்னிலங்கைச் செய்திகள் மக்களை ஏமாற்றிய என்.பி.பி. அரசாங்கம் – சாடுகின்றார் நாமல்
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மக்களை ஏமாற்றிய என்.பி.பி. அரசாங்கம் – சாடுகின்றார் நாமல்

Share
Share

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான என்.பி.பி. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதைத் தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“திருடனும் மக்களோடு இணைந்து திருடனைப் பிடிப்பது போல் தான் என்.பி.பி. அரசும் செயற்படுகின்றது. அரசில் உள்ள பலரின் சொத்து விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசு  போதைப்பொருளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது. அரசின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தனர். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர்  கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன  என்பது தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.

குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வுப் பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசு தொடர்ந்தும் எம் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் எம் மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பைக் குற்றம் சாட்டியே கடந்து விட்டனர். மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதைத் தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...