Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப் பொருளை விநியோகிப்பவர்கள் மொட்டுக்கட்சியினர் – அரசாங்கம் குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைப் பொருளை விநியோகிப்பவர்கள் மொட்டுக்கட்சியினர் – அரசாங்கம் குற்றச்சாட்டு!

Share
Share

நீதிமன்ற உத்தரவில்லாமல் எமது அரசாங்கம் யாரையும் கைது செய்ததில்லை. பாதாளக் குழுக்களை போஷித்து அதன் மூலம் நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவந்து விநியோகிப்பவர்கள் மொட்டு கட்சியில் இருப்பவர்கள் என்பது நாட்டு மக்களுக்கு
தெரியும். அதனால் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை எமது அரசாங்கத்தின் மீது சுமத்தி தப்பிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், நீதிமன்ற உத்தரவின்றி பொலிஸார், இராணுவத்தினர் என யாரையும் எமது அரசாங்கம் கைது செய்ததில்லை.

அதனால் இராணுவத்தினரை கைது செய்திருப்பதாக நாமல் எம்.பி. தெரிவித்த விடயத்தில் எந்த உண்மையும் இல்லை.

முன்னாள் கடற்படைத் தளபதி, அவர் புலனாய்வு பிரிவில் இருக்கும்போது செய்த ஒரு நடவடிக்கை காரணமாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வரும் முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருளுடன் எமது அரசாங்கத்தை தொடர்புபடுத்த நாமல் முயற்சித்தார்.

ஆனால் போதைப்பொருளுடன் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மனம்பேரி தொடர்புபட்டவர் என யாரும் அறிந்த விடயம்.

அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் இணைப்புச் செயலாளர்.

அதனால் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் மொட்டு கட்சியில் இருக்கின்றனர் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...

இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த...