Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப்பொருள் பாவனை; கடந்த ஒரு மாதத்தில் மூவாயிரம் பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் பாவனை; கடந்த ஒரு மாதத்தில் மூவாயிரம் பேர் கைது!

Share
Share

இலங்கையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 29 ஆம் திகதி முதல் இந்த மாதம் (செப்டெம்பர்) 4 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச்  சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1011 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 972 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  28 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 913 பேரும், கஞ்சா செடிகளுடன் 29 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒரு கிலோ 907 கிராம் 606 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒரு கிலோ 856 கிராம் 529 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஒரு கிலோ 342 கிராம் 62 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், ஆயிரத்து 59 கிலோ 899 கிராம் 634 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளும், 6 ஆயிரத்து 733 போதை மாத்திரைகளும், 4 ஆயிரத்து 53 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

33 அரச நிறுவனங்களை மூடுகிறது அரசாங்கம்?

நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை....

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று...

வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! ஆனால் உள்ளகப் பொறிமுறையின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்கவே முடியாது என்கின்றார் பிரதமர்!

“பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல....

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் பலி!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 9ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற...