Home தென்னிலங்கைச் செய்திகள் பெண்கள் இருவர் விபத்தில் சாவு – நால்வர் படுகாயம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பெண்கள் இருவர் விபத்தில் சாவு – நால்வர் படுகாயம்!

Share
Share

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அங்குணகொலபெலஸ்ஸவில் 175 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

நேற்று மத்தளவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சிறிய வானின் பின்புற டயர் வெடித்து வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் வானில் 6 பேர் இருந்தனர், காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்தவர்கள் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...