பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து, இந்த விசேட கூட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்களுடன் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் பாடசாலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்குமென கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
Leave a comment