Home தென்னிலங்கைச் செய்திகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

Share
Share

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து, இந்த விசேட கூட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்களுடன் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்தநிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் பாடசாலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்குமென கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...