Home தென்னிலங்கைச் செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர அநுர அரசு திட்டம் – ஐக்கிய சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர அநுர அரசு திட்டம் – ஐக்கிய சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு!

Share
Share

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதைவிடவும் மிகவும் பாரதூரமான சட்டமொன்றை கொண்டுவருவதே அரசின் திட்டமாக உள்ளது.”

– இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மறந்துவிட்டே அரசு செயற்படுகின்றது. ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் பற்றி அதிகளவில் பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திசை திருப்பும் நோக்கிலேயே இவ்வாறு செயற்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும், அதைவிட மிகவும் பாரதூரமான சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கே ஆளுங்கட்சி முற்படுகின்றது.

மன்னாரில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது சிறிய நேபாளமாக மன்னார் மாறியுள்ளது. இவ்வாறான மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதாக இருந்தால் ஆளுங்கட்சிக்கு அடக்குமுறை என்பது அவசியம். அதனால்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர முற்படுகின்றனர்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சி மௌனம் காக்கின்றது. எல்லை நிர்ணய விவகாரத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வடக்கு மக்களை ஏமாற்ற முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...