Home தென்னிலங்கைச் செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் நிறைவு- நீதி அமைச்சர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் நிறைவு- நீதி அமைச்சர்!

Share
Share

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான சட்ட வரைவு இன்னும் சில நாட்களில்  இறுதிப்படுத்தப்படும்.” – இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பயங்கரவாத் தடைச் சட்டத்தை நீக்குவதென்பது அரசின் தேர்தல் வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து, தற்போது சட்ட வரைவை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.  

இந்த விவகாரத்தைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...